/* */

தஞ்சை சரகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்

தஞ்சை சரகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 1600 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

தஞ்சை சரகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள்.

போலி மதுபானங்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுஇருந்தார். இதன்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடந்து வந்தது.

இந்நிலையில் ஊரடங்கு மற்றும் பொங்கல் பண்டிகையின் போது விற்பனை செய்வதற்காக வெளிமாநிலங்களில் இருந்து போலி மதுபானங்களை தஞ்சை கொண்டு வந்து பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், கண்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி மற்றும் இளையராஜா, விஜய், சுந்தர்ராமன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர்.

இதில் 1600 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த பார் உரிமையாளர் கமல் உட்பட மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. போலி மதுபானங்கள் பதுக்கி வைத்திருந்த குடோனுக்கும் போலீசார் சீல் வைத்தனர்.

Updated On: 6 Jan 2022 2:07 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்