/* */

வெள்ளத்தில் மூழ்கியதால் அழுகிய நாற்றுகளை அப்புறப்படுத்தி வரும் விவசாயிகள்

மழைநீர் வடிந்து அழுகிய நாற்றுகளை தரம் பிரித்து, மீண்டு நாற்று நட்டு சாகுபடி செய்தாலும் மகசூல் கிடைப்பது சந்தேகம்தான்

HIGHLIGHTS

வெள்ளத்தில் மூழ்கியதால் அழுகிய நாற்றுகளை அப்புறப்படுத்தி வரும் விவசாயிகள்
X

மழையால் அழுகி போய், விளைநிலங்களில் மிதக்கும் நாற்றுகளை சாலையோரங்களில் தூக்கி எறியும் விவசாயிகள்.

மழையால் அழுகி போய், விளைநிலங்களில் மிதக்கும் நாற்றுகளை சாலைகளில் தூக்கி எறியும் விவசாயிகள். மாவட்டந்தோறும் நாற்று தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், கூடுதல் விலைக்கு நாற்று வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, சுமார் 25,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா, தாளடி பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. ராமபுரம், திட்டை, அம்மாப்பேட்டை, உக்கடை உள்ளிட்ட பகுதிகளில் மழை விட்டும், விளைநிலங்களில் மழை நீர் வடியாததால், நாற்று பயிர்கள் அழுகி நீரில் மிதக்கின்றன, இதனை அப்புறப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுப்பட்டுள்ளனர். இது குறித்து திட்டை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், நல்ல தரமான விதை நெல், நாற்று வாங்கி ஏக்கருக்கு 25,000க்கு மேல் செலவு செய்து சாகுபடி மேற்க்கொண்டோம்.

ஆனால் நாற்று நட்டு இருபது நாட்களில் கடுமையான மழை காரணமாக நாற்றுகள் அனைத்தும் நீரில் மூழ்கின, முறையாக வடிகால் வாய்கால்கள் தூர்வாராததால், மழை விட்டு நான்கு நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை விளைநிலங்களில் மழை நீர் வடியாததால், பயிர்கள் அழுகி நீரில் மிதக்கின்றன. அதனால் அழுகிய நாற்றுகளை தூக்கி எறிந்து வருவதாகவும் கூறும் விவசாயிகள், தற்போது மாவட்டம் முழுவதும் நாற்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

இனிமேல் மழைநீர் வடிந்து அழுகிய நாற்றுகளை தரம் பிரித்து, மீண்டு நாற்று நட்டு சாகுபடி செய்தாலும், உரிய மகசூல் கிடைப்பது சந்தேகம் தான், ஏன்னென்றால் பருவம் தவறி சாகுபடி செய்தால் மகசூல் கிடைப்பது கடினம் என்கின்றனர். ஏற்கெனவே ஏக்கருக்கு 25,000 வரை செலவு செய்துள்ளோம், தற்போது மேலும் புதிதாக நாற்று நற்று, புதிதாக உரம் தெளிக்க வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். ஆனால் தமிழக அரசு இழப்பீடாக 8,000 அறிவித்துள்ளது. இது போதுமானதாக இல்லை, எனவே ஏக்கருக்கு 30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


Updated On: 25 Nov 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  2. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  3. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  4. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  5. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  6. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  7. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  8. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  9. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  10. தமிழ்நாடு
    கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிகல்வித்துறையுடன் இணைப்பதற்கு ஓபிஎஸ்...