/* */

பட்டுக்காேட்டை அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.1.90 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

பட்டுக்காேட்டை அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.1.90 லட்சம் பறிமுதல்
X

சிவக்கொல்லை பகுதியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில், நகராட்சிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு அதிகாரிகளின் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பணப்பட்டுவாடா தவிர்க்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பட்டுக்கோட்டை நகராட்சி சிவக்கொல்லை பகுதியில் தேர்தல் அதிகாரி சாந்தகுமார் தலைமையில் தேர்தல் அலுவலர்கள் ஆய்வு பணி மேற்கொண்ட பொழுது மீன் ஏற்றும் வண்டியில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக டெம்போ ஓட்டுனர் வாசிம் அக்ரமிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது எந்தவித ஆவணங்களும் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து ரூபாய் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Updated On: 2 Feb 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  2. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  3. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  5. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  6. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  7. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  8. குமாரபாளையம்
    நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு..!
  9. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  10. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!