தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து. அருகில் வீடுகள் இருப்பதால், பெரும் சேதம் ஏற்படும் முன்பு தீயை கட்டுக்கொள் கொண்டு வர கோரிக்கை.
தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகள் தஞ்சாவூர் நகரின் மையப்பகுதியில் உள்ள ஜெபமாலைபுரம் குப்பை சேமிப்பு கிடங்கில் சேகரித்துவைக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ மளமளவென்று கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
மேலும் காற்றின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்தது வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு மேல் எரிவதால், அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்படுகிறது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குப்பை கிடங்கு அருகில் அதிக வீடுகள் இருப்பதால் பெரும் சேதம் ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தகவல் அறிந்து வந்து தீயனைப்பு வீரர்கள் தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu