/* */

பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் மனைவி கண்முன்னே கணவன் பலி

பட்டுக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் மனைவி கண்முன்னே, கணவன் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் மனைவி கண்முன்னே கணவன் பலி
X

புதுக்கோட்டை மாவட்டம் புள்ளான் விடுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் புண்ணிய நாதன்(42). இவர் சாலை பணியாளராக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் அவரது மனைவி சோபனாவுடன் பட்டுக்கோட்டை அருகே உள்ள களத்தூர் கிராமத்திற்கு உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது செருவாவிடுதி ஆற்றுப் பாலத்தைக் கடந்தபின் பட்டுக்கோட்டையில் இருந்து வந்த கார் எதிர் பாராதவிதமாக இவரது பைக் மீது மோதியது. இதில் புண்ணிய நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சோபனா தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இந்நிலையில் இறந்த புண்ணிய நாதன் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டது.

மதியம் 2 மணிக்கு கொண்டு வரப்பட்ட அந்த பிணவண்டி மாலை 6 மணி ஆகியும், அரசு மருத்துவமனை நுழைவாயிலில் இறந்த புண்ணிய நாதன் உடல் இருந்தது.

Updated On: 26 April 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க