பேராவூரணி அருகே விவசாயி வெட்டிக்கொலை; கள்ளக்காதலி உள்ளிட்ட இருவர் கைது

பேராவூரணி அருகே விவசாயி வெட்டிக்கொலை; கள்ளக்காதலி உள்ளிட்ட இருவர் கைது
X

பைல் படம்.

பேராவூரணி அருகே விவசாயி வெட்டிக்கொலை செய்தது தொடர்பாக பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள தில்லங்காடு கிராமத்தைச் சேர்ந்த அடைக்கலம் மகன் செல்வகுமார் (வயது 52). விவசாயி. இவரது மனைவி சுஜாதா 8 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இவருக்கு அரவிந்த் (வயது 21) என்ற மகனும், பவித்ரா (வயது 25). தமிழ்மணி (வயது 22) என்ற மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவரும் திருமணமாகி கணவரோடு வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் செல்வக்குமார், தனது ஊரான தில்லங்காட்டிலிருந்து கறம்பக்காடு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சுமார் இரவு 7 மணி அளவில் கறம்பக்காடு சுடுகாடு அருகே சென்றபோது மர்ம நபரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக் கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், அண்ணாதுரை, வசந்தா மற்றும் போலீஸார் சடலத்தை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான சுதா (38) என்பவருடன் செல்வகுமார் தவறான தொடர்பில் இருந்துள்ளார். சுதாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

மேலும் அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கும் சுதாவுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சுதாவுடன் பழகுவதில் ஏற்பட்ட தகராறில் ராமலிங்கம் இந்த கொலையை செய்திருக்கலாமோ என்ற கோணத்தில் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!