பட்டுக்கோட்டையில் பரவலாக மழை
X
By - Aaruthran, Reporter |9 April 2022 7:30 PM IST
பட்டுக்கோட்டையில் திடீர் மழை - ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்ததால் வெப்பம் தணிந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகர் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று பிற்பகல் திடீரென காற்றுடன் கூடிய மழை பெய்ய துவங்கியது. பின்னர் நேரம் செல்ல செல்ல கன மழையாக ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கடும் வெப்பத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu