/* */

தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் நூதன முறையில் போராட்டம்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து மல்லிப்பட்டினத்தில் மீனவர்கள் கட்டுமர படகை தோளில் சுமந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் நூதன முறையில் போராட்டம்
X

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து மல்லிப்பட்டினத்தில் மீனவர்கள் கட்டுமர படகை தோளில் சுமந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் பெட்ரோல், டீசல் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்தும், உடனடியாக மத்திய அரசு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் மல்லிபட்டினம் தாஜூதீன் மற்றும் ஏராளமான விசைப்படகு மீனவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

அப்போது மீனவர்கள் ஆரம்ப காலத்தில் புழக்கத்திலிருந்த கட்டுமரத்தை தள்ளுவண்டியில் வைத்து தள்ளியும், கட்டுமரத்தை தோளில் சுமந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 16 Jun 2021 8:30 AM GMT

Related News