/* */

ஆறு மாத குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு: நரபலியா என காவல்துறை விசாரணை?

மீன் வைக்கும் பெட்டகத்தில் 6 மாத பெண் குழந்தை மூழ்கி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

ஆறு மாத குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு: நரபலியா என காவல்துறை விசாரணை?
X

பைல் படம்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர் நசுருதீன். இவரது 6மாத பெண் குழந்தை ஹஜிரா. இந்நிலையில் 6 மாத பெண் குழந்தை ஹஜிரா அவரது வீட்டின் பின்புறம் உள்ள மீன் வைக்கும் பிளாஸ்டிக் தொட்டியில் நீரில் மூழ்கி சந்தேகத்திற்கிடமாக இறந்து கிடந்தது. பின்னர் குடும்பத்தினர் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து பேசி மல்லிப்பட்டினம் பள்ளிவாசலில் அடக்கம் செய்து விட்டனர். இது குறித்து அப்பகுதி தலையாரி சுதாகர் மூலம் கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்துவுக்கு தெரியவந்தது. பின்னர் கிராம நிர்வாக அலுவலர், இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். 6 மாத பெண் குழந்தை நீர்நிறைந்த மீன் தொட்டியில் சந்தேகத்திற்கிடமாக இறந்து கிடந்தது எப்படி, மேலும் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா? எனவும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 18 Dec 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்