ஏரியில் ஆண் சடலம்.: கொலையா... தற்கொலையா... போலீசார் விசாரணை

ஏரியில்  ஆண் சடலம்.:  கொலையா... தற்கொலையா... போலீசார் விசாரணை

ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம். யாராவது கொலை செய்து வீசினார்களா ? அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த சூரப்பள்ளம் பெரிய ஏரியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து பட்டுக்கோட்டை தாலுக்கா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை தாலுக்கா போலீசார் விரைந்துவந்து உடலை கைபற்றி அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து கரை ஒதுங்கிய ஆண் சடலம் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? யாராவது கொலை செய்து ஏரியில் வீசினார்களா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story