மது போதையில் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து சூப்பர்வைசர் பலி

மது போதையில் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து சூப்பர்வைசர் பலி
மது அருந்திவிட்டு வெளியே வந்த போது, பால்கனியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

மது போதையில் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து சம்பவ இடத்திலேயே சூப்பர்வைசர் பலியானார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பாளமுத்தி கிராமத்தை சேர்ந்தவர் ராமசந்திரன்(50). இவர் பட்டுக்கோட்டை தங்கவேல் நகரில் உள்ள அப்பார்ட்மெண்டில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இவர் தங்குவதற்காக இரண்டாவது மாடியில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது அறையில் மது அருந்திவிட்டு வெளியே வந்த போது, பால்கனியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரேதத்தை கைப்பற்றி உடல்கூராய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story