/* */

மதுக்கூரில் போலிமருத்துவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை: ரூ1.20 கோடி பறிமுதல்

சித்த மருத்துவ படிப்பு படித்து விட்டு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வந்தது

HIGHLIGHTS

மதுக்கூரில் போலிமருத்துவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை: ரூ1.20 கோடி பறிமுதல்
X

மதுக்கூரில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் அலோபதி சிகிச்சை அளிப்பதாக வந்த புகாரையடுத்து, இரண்டு கிளினிக்கில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் அறிவழகனுடைய கிளினிக்கில் 1 கோடியே 12 லட்சம் கைப்பற்றப்பட்டது- வருமான வரித்துறை அதிகாரிகள் நள்ளிரவிலும் சோதனை.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள மதுக்கூர் பேரூராட்சியில் மாதவன், அறிவழகன் ஆகிய இரண்டு மருத்துவர்கள் முறையாக அலோபதி மருத்துவ படிப்பு படிக்காமல் ஆங்கில வைத்தியம் செய்துவருவதாக வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, இருவரது மருத்துவமனையையும் சப்கலெக்டர் பாலசந்தர் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் தலைமையில் காவல்துறையினரும் சோதனையிட்டனர். . இதில் எந்தவித சான்றுகளும் இல்லாமல் மருத்துவம் பார்த்ததாக மாதவன் என்பவரை போலீசார் கைது செய்து அவரது மருத்துவமனையை சீல் வைத்தனர்.

இதேபோல அறிவழகனுடைய கிளினிக்கை ஆய்வு செய்தபோது,அவர் சித்த மருத்துவ படிப்பு படித்து விட்டு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதுதவிர அவரது கிளினிக்கில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட போது கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவழகன் கிளினிக்கில் ஆய்வு மேற்கொண்டு 1 கோடியே 12 லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றினர். மேலும் நள்ளிரவிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்றதோடு,அறிவழகனிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டுக்கோட்டை சப்கலெக்டர் பாலசந்தர் மற்றும் டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் ஆகியோர் அங்கேயே முகாமிட்டுள்ளனர்.

Updated On: 13 Aug 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?