அதிராம்பட்டினத்தில் மின்கம்பத்தில் தீ விபத்து

அதிராம்பட்டினத்தில் மின்கம்பத்தில் தீ விபத்து
X
அதிராம்பட்டினத்தில் மின்கம்பத்தில் தீ விபத்து. உடனடியாக மின்சாரம் இணைப்பு நிறத்தப்பட்டதால், பெரும் சேதம் தவிர்ப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் சுப்பிரமணியர் கோவில் தெரு பகுதியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்குள்ள ஒரு மின் கம்பத்தில் திடீரென மின்கம்பியில், தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதனால் புகை மூட்டம் அந்த பகுதி முழுவதும் நிறைந்து காணப்பட்டது.

இதை கண்ட பொதுமக்கள் மற்றும் பெண்கள் அலறியடித்துக் கொண்டு ஓடி அவரவர்கள் வீட்டிலுள்ள மின் இணைப்பை துண்டித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.

உடனடியாக மின் இணைப்பை துண்டித்து தீ அணைக்க பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture