/* */

கடல் நீர் உள்வாங்கியது

கடல் நீர் உள்வாங்கியது
X

நேற்று வீசிய சூறைக்காற்றால் பல்வேறு பகுதிகளில் விழுந்துள்ள மரங்களை பொதுமக்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர், மேலும் அதிராம்பட்டினம் கடல் பகுதியில் 300 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உள்வாங்கி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்று வீசியது. சுமார் ஒரு மணி நேரம் வீசிய காற்றால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன. தற்போது விழுந்த மரங்களை பொதுமக்களும், பொதுப்பணித்துறையினரும் அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், ஏரிப்புறக்கரை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு கடல்நீர் உள்வாங்கிய இருப்பதால், மீன் பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு தங்களுடைய நாட்டு படகுகளை தள்ளிக் கொண்டு கரை வந்து சேர்ந்தனர். மேலும் நேற்று வீசிய பலத்த காற்றால் நாட்டுப் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்துள்ளதால் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 26 May 2021 5:55 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...