/* */

பாபநாசம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் மனைவி, மகன் கைது

பாபநாசம் அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி, மகன் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மருதாநல்லூர் நந்தவனம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (50). இவர் டைல்ஸ் பதிக்கும் வேலை பார்த்து வந்தார். பாபநாசம் அருகே உத்தாணி மயான சாலையில் அடையாளம் தெரியாத நபர்களால் நாகராஜன் பயங்கரமாக தாக்கப்பட்டு தலையில் காயத்துடனும், கால்களில் பாட்டில்களால் கிரீயும் படுகாயத்துடன் கிடந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு பாபநாசம் துணை சூப்பிரண்டு பூரணி, இன்ஸ்பெக்டர் அழகம்மாள் ஆகியோர் சென்று நாகராஜை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து நாகராஜ் மகன் சிவபாரதி (25) அளித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. போலீஸ் விசாரணையில் நாகராஜ் தொடர்ந்து குடித்துவிட்டு தனது மனைவி ரேவதியை (46) அடித்துக் கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரேவதி அரிவாளை எடுத்து நாகராஜை வெட்டியுள்ளார். பின்னர் மகன் சிவபாரதி தனது தந்தை நாகராஜை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று பாபநாசம் அருகே உத்தாணி கிராமத்தில் மயான சாலை பகுதியில் இறக்கிவிட்டு அங்கே தலையில் கல்லை போட்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

இதனையொட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ரேவதி, சிவபாரதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த நாகராஜ் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.

இதுகுறித்து நாகராஜ் உறவினர் மருதாநல்லூரைச் சேர்ந்த பிரம்மானந்தம் (29) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் பகவதி சரணம், சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் இதனை கொலை வழக்காக மாற்றி நாகராஜின் மனைவி ரேவதியையும் அவரது மகன் சிவபாரதியையும் கைது செய்தனர்.

Updated On: 10 Jan 2022 12:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  7. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  8. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  9. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  10. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்