/* */

பாபநாசம் வட்டாரத்தில் வீட்டு காய்கறி தோட்டம் விதை வழங்கும் விழா

கும்பகோணம் அருகே, பாபநாசம் வட்டாரத்தில் வீட்டு காய்கறி தோட்டம் விதை வழங்கும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

பாபநாசம் வட்டாரத்தில் வீட்டு காய்கறி தோட்டம் விதை வழங்கும் விழா
X

ஆதனூர் கிராமத்தில், காய்கறித் தோட்டத்துக்கு விதை,செடிகள் வழங்கப்பட்டன. 

கும்பகோணம் அருகே, பாபநாசம் வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, ஊட்டச்சத்து தளைகள் மற்றும் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் அமைப்பதற்கு, விதை வழங்கும் விழா ஆதனூர் கிராமத்தில் நடைபெற்றது.

மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பாபநாசம் தோட்டக்கலை உதவி இயக்குனர் கனிமொழி கூறியதாவது: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 75% மானியத்தில் ஊட்டச்சத்து தளைகள் கொண்ட 8 வகை செடிகள் மற்றும் 12 வகை காய்கறி விதைகள் கொண்ட தொகுப்பு பாபநாசம், அம்மாபேட்டை மற்றும் திருவையாறு வட்டாரங்களில் வழங்கப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ளவர்கள், ஆதார் மற்றும் புகைப்பட ஆவணங்களுடன், அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி ஊட்டச்சத்துகள் மற்றும் விதைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஆதனூர் கிராம பஞ்சாயத்து தலைவர் சித்ரா மகாலிங்கம், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் கார்த்திகேயன், காந்தி, பிரதீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Jan 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு