/* */

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் சரத்குமார்,ராதிகா சாமி தரிசனம்

கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் சரத்குமார், ராதிகா குடும்பத்துடன் சாமி தரிசனம். பேரக் குழந்தைகளுக்கு அரிசி, வெல்லம் துலாபாரம் செய்தனர்.

HIGHLIGHTS

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் சரத்குமார்,ராதிகா சாமி தரிசனம்
X

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை முல்லைவனநாதர் திருகோவிலில் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் அவரது மனைவி நடிகை ராதிகா குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

முல்லைவன நாதரை தரிசனம் செய்துவிட்டு பின்னர் கர்ப்பரட்சாம்பிகையை அம்பாளை தரிசனம் செய்தனர். அப்போது எடைக்கு எடை அரிசி வெல்லம் வைத்து பேரக்குழந்தைகளுக்கு துலாபாரம் செய்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் சார்பில் அவர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது ராதிகா கூறியதாவது, கர்ப்பரட்சாம்பிகை கோவிலுக்கு 29 ஆண்டுகளாக நாங்கள் வருகிறோம். அதன்படி இன்றும் என் மகள் மருமகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் அம்பாளை தரிசனம் செய்ய வந்துள்ளோம். கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக வர முடியாமல் இருந்தது தற்போது வாய்ப்பு வந்துள்ளது வந்துள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.

சரத்குமார் கூறும்போது, தமிழகம் முழுவதும் பெருந்தலைவர் காமராஜர் 119 வது பிறந்த நாள்விழா சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. காமராஜரின் நினைவு மணிமண்டபங்களில் சமக சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து ஒளி விளக்குகள் ஏற்றப்பட்டது.

திருக்கருகாவூரில் உள்ள இக்கோவிலுக்கு மனைவி,மகள், மருமகன், பேரக் குழந்தைகளுடன் தரிசனம் செய்ய வந்துள்ளேன். வேண்டுதல் இருந்தது அந்த வேண்டுதலை நிறைவேற்றி உள்ளோம். கோவிலில் வைத்து அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு பதில் சொல்லக் கூடாது. இன்னும் 15 நாட்களுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பதில் அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 15 July 2021 1:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  2. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  3. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  5. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  6. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  8. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  10. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?