/* */

பாபநாசத்தில் பிளாஸ்டிக் தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்

பாபநாசம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பாபநாசத்தில் பிளாஸ்டிக் தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்
X

பாபநாசம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. 

தமிழ்நாட்டை பிளாஸ்டிக் மாசு இல்லாத மாநிலமாக உருவாக்குவதற்கு, அரசு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. நமது சுற்றுச்சூழலை காப்பது நம் கடமை என்ற உணர்வோடு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மாற்று பொருட்களை பயன்படுத்துமாறு தமிழக அரசு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம், பாபநாசம் பேரூராட்சியில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பாபநாசம் பகுதியில் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறு துண்டு பிரசுரங்கள் மூலம் விநியோகம் செய்து, விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார மேற்பார்வையாளர்கள் நித்தியானந்தம், நாடிமுத்து மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Dec 2021 11:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  2. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  3. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  4. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  5. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  7. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  8. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  9. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?