/* */

கபிஸ்தலம் பகுதியில் கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன: விவசாயிகள் வேதனை

கபிஸ்தலம் பகுதியில் கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன, இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

கபிஸ்தலம் பகுதியில் கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன: விவசாயிகள் வேதனை
X

கபிஸ்தலம் பகுதியில் மழையால் நெற் பயிர்கள் சேதமடைந்திருப்பதை காணலாம்.

கபிஸ்தலம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த திடீர் கனமழை காரணமாக கபிஸ்தலம், சருக்கை, இளங்கார்குடி, மேட்டுத்தெரு, கருப்பூர், மேல கபிஸ்தலம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப் பரப்பில் தாளடி, சம்பா பயிர்கள் வயலிலேயே சாய்ந்தன.

வயல்களில் தேங்கிய தண்ணீர் வடியாததால் நெல் பயிர்கள் மீண்டும் முளைத்து விடும் அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். இந்த பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நிலப்பரப்பில் அதிக அளவில் கரும்பு பயிர் செய்திருந்தனர்.

திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை கடந்த சில வருடங்களாக மூடப்பட்டு விட்டதால் இங்கு உள்ள விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிர் செய்வதை தவிர்த்து நெல் பயிருக்கு மாறிவிட்டனர். இதனால் இந்த பகுதியில் உள்ள நிலங்களில் சுமார் 80 சதவீத அளவிற்கு நெல் பயிர்கள் பயிர் செய்து வருகின்றனர்.

தற்போது கனமழையால் பாதிக்கப்பட்ட நிலங்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Updated On: 4 Jan 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  4. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  5. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  7. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  8. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  9. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  10. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!