பாபநாசம் அருகே பெண்ணிடம் செல்போனை பறித்தவர் கைது

பாபநாசம் அருகே பெண்ணிடம் செல்போனை பறித்தவர் கைது
X

ரவி

பாபநாசம் அருகே பெண்ணிடம் செல்போனை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

பாபநாசம் அருகே பண்டாரவாடை பெரிய தெருவில் வசித்து வருபவர் முகமது ஹினிப் மனைவி ரெஜினா பேகம் (57). இவர் தனது அம்மா வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ராஜகிரி காமராஜர் நகரைச் சேர்ந்த ரவி (46) என்பவர் ரெஜினா பேகம் கைப்பையில் வைத்திருந்த ரூ. 39 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஒன்றையும், ரூ. 300 ரொக்கப் பணத்தையும் மோட்டார் சைக்கிளில் பறித்துக்கொண்டு சென்று விட்டார்.

இதுகுறித்து ரெஜினா பேகம் கொடுத்த புகாரின் பெயரில், பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற ரவியை கைது செய்தனர். அவரை, பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 15 நாள் காவலில் அடைத்தனர்.

Tags

Next Story
why is ai important to the future