/* */

இன்சுலினை சுரக்கச்செய்யும் மருத்துவ குணம் கொண்ட அரிசி...!

பாபநாசம் பகுதியில் மருத்துவம் குணம் கொண்ட இயற்கை நெல் சாகுபடி ஆத்தூர் கிச்சடி சம்பா நெல் சாகுபடி தீவரமாக நடந்து வருகிறது

HIGHLIGHTS

இன்சுலினை சுரக்கச்செய்யும்   மருத்துவ குணம் கொண்ட அரிசி...!
X

பைல்படம்

சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகப் பார்க்கப்படும் ஆத்தூர் கிச்சடி சம்பா அரிசி இரகம் தற்போது அதிக அளவில் தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர்.

இதில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். தேவையான அளவு மாவுச்சத்தும், நார்ச்சத்தும் உள்ளது. மேலும் உடல் எடையை அதிகரிக்க செய்யும். இந்த வகை அரிசியை கஞ்சி வைத்து அருந்துவதன் மூலம் இன்சுலின் சுரப்பு அதிகரித்து சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதுடன் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் மருத்துவ குணம் உண்டு. பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.

அந்த வகையில் ஆத்தூர் கிச்சடி சம்பா நெல் பாபநாசம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக வெள்ளை அரிசியும் சன்னரகமாகவும் நாம் சாப்பிட விரும்புகிறோம். அதற்கேற்றார் போல் வெள்ளை அரிசியும், சன்னரகமாகவும் சாப்பிட சுவையாகவும் மக்கள் விரும்பி சாப்பிடும் இரகம் தான் ஆத்தூர் கிச்சடி சம்பா. 4 1/2 அடி வரை வளரும் தன்மையுடையது. 5 மாத விளைச்சலான இந்த அரிசியானது ஆடி பட்டத்தில் இருந்து தை பட்டம் வரை ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே விளைகிறது.

பாபநாசம் பகுதியில் மருத்துவம் குணம் கொண்ட இயற்கை நெல் சாகுபடி ஆத்தூர் கிச்சடி சம்பா நெல் சாகுபடி மும்முரமாக நடந்து வருகிறது. இப்போது பரவலாக விழிப்புணர்வு ஏற்பட்டு மருத்துவ குணம் கொண்ட நெல் இரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்ய முயற்சித்து வருகின்றனர்.

இப்பகுதியை சேர்ந்த பட்டதாரியான முருகராஜ் என்பவர் 2 1/2 ஏக்கர் நஞ்சை பரப்பளவில் இப்பயிரை சாகுபடி செய்கிறார். 11 வருடமாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இதற்கு பஞ்சகாவியம், மீன் அமினோ அமிலம், தயிர் கரைசல், பூச்சிவிரட்டி ஆகியவற்றை நாங்களே தயாரித்து பயன்படுத்தி வருகின்றோம். இதனை ஒற்றை நடுவுமுறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இந்த இரகம் அறுவடை கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் இன்னும் 20 நாட்களில் அறுவடைக்கு ஏதுவான நிலையை அடையும். இந்த நெல்லை கிலோ 70ரூ என்ற அளவில் தஞ்சை பகுதி வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

Updated On: 2 Feb 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?