/* */

கபிஸ்தலத்தில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும்: போலீசார் அறிவுரை

கபிஸ்தலத்தில் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

கபிஸ்தலத்தில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும்: போலீசார் அறிவுரை
X

கபிஸ்தலத்தில் சிசிடிவி வைக்க வலியுறுத்தி நடந்த கூட்டம்

கபிஸ்தலத்தில் வணிகர் சங்கத்தினர், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளர் பூரணி கலந்துகொண்டு பேசுகையில் கபிஸ்தலம் காவல் சரக பகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில் குற்ற வழக்குகள் நடைபெறா வண்ணம் இருக்க வணிகர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், இணைந்து கேமரா அமைத்தால் குற்ற வழக்குகள் நடைபெறாது.

அப்படி நடைபெற்றாலும் உடனடியாக குற்றவாளிகளை பிடிக்க ஏதுவாக இருக்கும். மேலும் ரகசிய கேமரா இருப்பது தெரிந்தால் குற்றங்கள் நடப்பது 90 சதவீதம் குறையும். எனவே அனைவரும் ஒத்துழைப்பு தந்து கபிஸ்தலம் காவல் சரகத்தில் உள்ள முக்கியமான பகுதிகளில் சிசிடிவி கேமரா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Jan 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  8. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  9. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா