/* */

பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற கல்லூரி மாணவனுக்கு பாராட்டு விழா

பாபநாசம் அருகே, தேசிய அளவில் பூப்பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கல்லூரி மாணவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற கல்லூரி மாணவனுக்கு பாராட்டு விழா
X

பாபநாசம் பேரூராட்சி அரயபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமரன், ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்புப்படை அதிகாரி. இவருடைய மகன் சிவ பிரகதீஷ் (20). இவர் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் மூன்றாமாண்டு பி.இ.படித்து வருகிறார். இவர் தேசிய அளவில் நடைபெற்ற பூப்பந்து போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்று தங்கப் பதக்கம், கோப்பை, நற்சான்றிதழ் பெற்றார்.

தேசிய அளவில் பூப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற கல்லூரி மாணவர் சிவ பிரகதீஷுக்கு பாராட்டு விழா பாபநாசம் லயன்ஸ் கிளப், பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் இணைந்து நடத்தியது. சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஆறுமுகம் தங்கப்பதக்கம் பெற்ற சிவ பிரகதீஷுக்கு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் செயலாளர் செந்தில், இயக்குனர்கள் பழனியப்பன், பாண்டியன், பன்னீர்செல்வம், சீனிவாசன், துணைத்தலைவர் ராஜாமுகமது, ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், வங்கி இயக்குனர்கள் மதியழகன், சேரலாதன், கிளை மேலாளர் அறிவழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Dec 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்