/* */

தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் பலி
X

கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் பகுதியில் ரயில் பாதையை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் பாபநாசம் இடையே வலங்கைமான் தாலுகா குமாரமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் மனோ. இவர் நேற்றிரவு உறவினர் வீட்டிற்கு சென்றபோது பாபநாசம் சுந்தரப்பெருமாள் கோவில் இடையே உள்ள ரயில் பாதையை கடக்க முயன்ற போது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே மனோ உயிரிழந்தார்.

இது குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இன்று காலை ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 March 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  10. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்