/* */

மதுக்கூர் வட்டார புலவஞ்சி கிராமத்தில் நெல் வயல்வெளி பள்ளி

மதுக்கூர் வட்டார புலவஞ்சி கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் நெல் வயல்வெளி பள்ளி நடைபெற்றது.

HIGHLIGHTS

மதுக்கூர் வட்டார புலவஞ்சி கிராமத்தில் நெல் வயல்வெளி பள்ளி
X

புலவஞ்சி கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் நெல் வயல் வெளிப்பள்ளி நடைபெற்றது .

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள புலவஞ்சி கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் நெல் வயல் வெளிப்பள்ளி நடைபெற்றது . ஆறு வகுப்புகள் கொண்ட இந்த பயிற்சியில் விதை முதல் அறுவடை வரை நெல்லில் ஒருங்கிணைந்த முறையில் செய்யப்பட வேண்டிய பயிர் பாதுகாப்பு முறைகள், விதை நேர்த்தி, யூரியா, உரத்தினை ஜிப்சம் வேப்பம் புண்ணாக்கு கலந்திடுதல், மாட்டு கோமியம் கொண்டு தயாரிக்கப்படும் களைக்கொல்லி மற்றும் மீன் அமினோ அமிலம் தயாரிப்பு போன்றவை பற்றி விவசாயிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது.

விவசாயிகளை வயல்வெளியில் அழைத்துச் சென்று பூச்சிகளை பிடிக்க செய்து நன்மை செய்யும் பூச்சி தீமை செய்யும் பூச்சிகளை கண்டறியவும், நன்மை செய்யும் பூச்சிகள் அதிகம் இருக்கும் பட்சத்தில் தேவையற்ற பூச்சிக்கொல்லி தெளிப்பதை தவிர்ப்பது பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.


இதில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பற்றிய விளக்க கையேடு வழங்கப்பட்டது. மேலும் நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி குறித்த திட்டம்பற்றி இத்திட்டத்தின் கீழ் 50 செய்த மானியத்தில் ஒரு ஆதார் கார்டுக்கு எட்டு கிலோ உளுந்து விதை வழங்கப்படுவது குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.

மேலும் தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் நெல், உளுந்து, மக்காச்சோளம், ராகி, குதிரைவாலி, நிலக்கடலை ஆகியவற்றுக்கு 50 சதவீத மானியத்தில் உரத்துடன் கூடிய இடுபொருட்கள் வழங்குவது பற்றி எடுத்துக் கூறப்பட்டது.

நெல் நுண்ணூட்டம் இடுவதின் முக்கியத்துவம் பற்றி வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். இதில் முன்னோடி பயிற்றுநர் ஜெகஜோதி கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி காய்ச்சல் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் நன்றி கூறினார்.

Updated On: 3 Feb 2023 4:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்