Begin typing your search above and press return to search.
ஒரத்தநாடு அருகே விஷம் குடித்த விவசாயி தற்கொலை
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் மேல தெருவை சேர்ந்தவர் அய்யாவு (65). விவசாயான இவருக்கு நீண்ட நாட்களாக சிறுநீரக கோளாறு இருந்தாக கூறப்படுகிறது. மேலும் வாரந்தோறும் டயாலிசிஸ் செய்து வந்துள்ளார். ஆனாலும் அவருக்கு வயிற்று வலி அதிகமாகவே இருந்தாகவும், அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்த அவர் வயலுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ஒரத்தநாடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.