/* */

ஆற்றில் குளிக்க சென்ற பாய் வியாபாரி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்

ஒரத்தநாடு அருகே கல்லணை கால்வாயில் குளிக்க சென்ற மதுரை பாய் வியாபாரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

HIGHLIGHTS

ஆற்றில் குளிக்க சென்ற பாய் வியாபாரி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்
X

கல்லணை கால்வாயில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்

மதுரை மாவட்டம், ஆண்டார் கொண்டாராம் கிராமம், கருப்ப பிள்ளை ஏந்தல் தெருவை சேர்ந்தவர் மங்களம். இவரது மகன் மணிகண்டன் 29. இவர் தனது தனது குடும்பத்தோடு ஒரத்தநாடு அருகே உள்ள சூரக்கோட்டை கிராமத்தில் தங்கி பல்வேறு பகுதிகளில் பாய் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு மணிகண்டன் மற்றும் அவரது சக நண்பர்கள் சூரக்கோட்டை கல்லணை கால்வாய் ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் மணிகண்டன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். தண்ணீரில் மூழ்கிய மணிகண்டனை அவரது நண்பர்கள் தேடிப்பார்த்து கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் ஒரத்தநாடு அருகே மேல உளூர் கல்லணை கால்வாய் ஆற்றில் உடல் மிதந்து வந்ததை கண்ட பொதுமக்கள் ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்ய அனுப்பி வைத்தனர்.

பின் நடைபெற்ற விசாரணையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணிகண்டன் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 22 Aug 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...