/* */

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை

தஞ்சை பகுதியில் அறுவடை செய்த நெல்லுடன் விவசாயிகள் காத்திருப்பதால், உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை

HIGHLIGHTS

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை
X

குவித்து வைக்கப்பட்டிருக்கும் அறுவடையான நெல்

ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 3 லட்சத்தி 20 ஆயிரம் ஏக்கர் இலக்குடன் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் இதுவரை நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை, இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல்லுடன் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் காத்திருக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் காசவளநாடு கோவிலலூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், அப்பகுதியில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் அறுவடை செய்த நெல்லுடன், விவசாயிகள் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலைய வளாகத்தில் மலைபோல் குவித்து வைத்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்து வருகிறது. இதனால் உடனடியாக நெல் கொள்முதல் பணியை தொடங்கி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் அறுவடை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் இப்போதே காலதாமதம் செய்யாமல் கொள்முதல் செய்தால், நெல் தேக்கம் ஏற்படுவதை தவிர்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Updated On: 8 Sep 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...