/* */

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் விவசாயி உயிரிழப்பு

குறுவை அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில், தாளடி சாகுபடிக்காக தனது வயல்வெளிகளை சரிசெய்யக்கூடிய பணியில் ஈடுபட்டு வந்தார்

HIGHLIGHTS

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் விவசாயி   உயிரிழப்பு
X

மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி ஜெயராமன்

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் விவசாயி உயிரிழந்த சம்பவம் குறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அடுத்த தலையாமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயராமன்( 62.) இவர் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரது வயலை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வருகிறார். தற்போது குறுவை அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில், தாளடி சாகுபடிக்காக தனது வயல்வெளிகளை சரிசெய்யக்கூடிய பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களாக இரவு நேரங்களில் காற்றுடன் கூடிய மழை கடந்த பெய்து வருகிறது. அவரது வயலில் தாழ்வாக சென்ற மின் கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல், மின் வயரை மிதித்ததால் விவசாயி ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக ஒரத்தநாடு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 Oct 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  2. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  4. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  5. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  6. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  7. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  10. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க