/* */

அய்யனார் ஆலய குடமுழுக்கு விழாவில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவல்

ஒரத்தநாடு அருகே அய்யனார் ஆலய குடமுழுக்கு விழாவில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

HIGHLIGHTS

அய்யனார் ஆலய குடமுழுக்கு விழாவில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவல்
X

ஒரத்தநாடு அருகே யானைமேல் அழகர் அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள புதூர் பகுதியில் யானைமேல் அழகர் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்த ஆலயம் ஒரத்தநாடு, தென்னமநாடு உள்ளிட்ட பகுதி மக்களின் குலதெய்வமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆலய குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த 18ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தினமும் நடைபெற்று வந்த. இன்று காலை ஆறாம் கால பூஜை செய்யப்பட்டு, கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கோவிலின் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கலசங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Updated On: 21 March 2022 6:39 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...