/* */

தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

ஒரத்தநாடு அருகே தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து.

HIGHLIGHTS

தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
X

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே சூரக்கோட்டை சைதாம்பாள்புரத்தில் தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு தேங்காய் மட்டையிலிருந்து நார் தனியாக பிரித்து எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலையை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சேர்ந்த மனோகரன் என்பவர் நடத்தி வருகிறார்.

வழக்கம் போல இந்த தொழிற்சாலையில் தேங்காய் மட்டையிலிருந்து நார் பிரித்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பற்றி எரிந்தது. அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து தஞ்சாவூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோ பிரசன்னா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மாலை 5 மணி வரை 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயணைக்கும் பணியில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டது. இந்த தீ விபத்தில் தென்னை நார்கள் மற்றும் தேங்காய் மட்டைகள் பிரித்தெடுக்கும் இயந்திரங்கள், தேங்காய் மட்டைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் போன்றவை எரிந்து சேதமடைந்தன. இதன் சேத மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து போலீஸாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 20 Jun 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  7. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  8. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  9. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  10. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்