/* */

சுவாமிமலை அருகே கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

சுவாமிமலை அருகே கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

HIGHLIGHTS

சுவாமிமலை அருகே கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு
X

சுவாமிமலை அருகே உள்ள நீலத்தநல்லூர் ஊராட்சி, மேல ஆத்துக்குறிச்சி கொள்ளிடம் ஆற்றங்கரையில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பதை, அவ்வழியே சென்ற பொதுமக்கள் கண்டனர். இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் ரவி கண்ணனிடம் புகார் செய்தனர்.

கிராம நிர்வாக அலுவலர் ரவி கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மஹாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்து கிடந்த பெண் யார்? அவர் ஏன் இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மர்ம நபர்கள் யாராவது கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  2. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  4. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  6. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  7. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  8. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்