திருச்சேறையில் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கல்
திருச்சேறையில் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சேறை அருள்மிகு சாரநாத பெருமாள் கோவிலில், திருவிடைமருதூர் அமமுக செயலாளர் ஜெகன் தலைமையில், சிறப்பு அபிஷேகம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
சிறப்பு விருந்தினராக அமமுக துணை பொதுச்செயலாளரும், தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான எம்.ரெங்கசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, திருச்சேறை கடைவீதியில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். மேலும், சுடர் மாற்றுத்திறனாளிகளில் இல்லத்தில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அமமுக அமைப்புச் செயலாளர் பொன்.த.மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் விஜயபாலன், உதயகுமார், மாவட்ட பிரிவு நிர்வாகிகள் வக்கீல் செல்லத்தம்பி, ராஜ்மோகன், எஸ்.எஸ். ராஜ், பிரகாஷ், லதா, உமா, ஒன்றிய நிர்வாகிகள் ஜெயசீலன், சுரேஷ், முருகன், கண்ணன், ரவி, செல்வம், வினோத், விநாயகம், முருகானந்தம், விசுவநாதன், ரமேஷ், பிரபு, மெல்கியூர் இளங்கோ மற்றும் ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.