/* */

திருப்பனந்தாள் அருகே முதலை கடித்ததில் காயம் அடைந்த பெண்ணிற்கு சிகிச்சை

திருப்பனந்தாள் அருகே முதலை கடித்ததில் காயம் அடைந்த பெண்ணிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

திருப்பனந்தாள் அருகே முதலை கடித்ததில் காயம் அடைந்த பெண்ணிற்கு சிகிச்சை
X

முதலை கடித்ததில் காயம் அடைந்த பானுமதி.

தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே அணைக்கரை மணகுண்ணம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி பானுமதி (வயது62) கொள்ளிடக்கரை அருகே அவரது வீடு உள்ளது. இந்நிலையில் கொள்ளிடக்கரை ஆற்றில் குளித்து விட்டு வீட்டுக்கு தேவையான மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கொள்ளிடக்கரையில் இருந்த முதலை இவரது இடது காலை கவ்விப் பிடித்தது.

பானுமதி காலை உதறியும் விடாத முதலை அவரது இடதுகாலை கவ்வி குதறியது. இதில் காயமடைந்த பானுமதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 April 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க