/* */

கும்பகோணம் திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது

கும்பகோணம் திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில் தேரோட்டம் மிக சிறப்பாக நடந்தது.

HIGHLIGHTS

கும்பகோணம் திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது
X

கும்பகோணம் திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறையில் பிரசித்தி பெற்ற சாரநாத பெருமாள் கோவில் உள்ளது.

பல்வேறு சிறப்பு வாய்ந்த சாரநாத பெருமாள் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி உபயநாச்சியார்களுடன் சாரநாதபெருமாள் இந்திர விமானம், சூர்யபிரபை, சேஷ வாகனம், கருடன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் கோவில் பிரகார புறப்பாடு நடந்தது.

தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதேவி, மகாலட்சுமி ஆகியோருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் சாரநாதபெருமாள் தேரில் எழுந்தருளினார். தேரோட்டத்தை அரசின் தலைமை கொறடா கோவிசெழியன், மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் ஆகியோர் இணைந்து வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது.

Updated On: 20 Jan 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!