/* */

பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

கும்பகோணம் அருகே தாராசுரத்தை சேர்ந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

HIGHLIGHTS

பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
X

காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த ஜோடிகள்.

கும்பகோணம் அருகே தாராசுரத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகள் திவ்யா (26). தாராசுரம் அருகே சோழன்மாளிகையில் வசிப்பவர் குணசேகரன் (28). மஸ்கட் நாட்டில் வேலை பார்க்கிறார். இவர்களது இருவரின் குடும்பத்தினரும் நட்பு ரீதியாக பழகி வருகின்றனர்.

அதனடிப்படையில் குணசேகரனுக்கும், திவ்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் வெவ்வேறு சமுதாயத்தினர் என்பதால் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதலர்கள் வீட்டின் அருகே உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டு கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் போலீசார் விசாரித்து மாப்பிள்ளை வீட்டாரிடம் திவ்யாவை அனுப்பி வைத்தனர்.



Updated On: 2 Aug 2021 10:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?