கும்பகோணத்தில் அரசு பஸ் மோதி கார் டிரைவர் உயிரிழந்தார்

கும்பகோணத்தில் அரசு பஸ் மோதி கார் டிரைவர் உயிரிழந்தார்
X
கும்பகோணத்தில் அரசு பஸ் மோதி கார் டிரைவர் பலியானார்

கும்பகோணம் அருகே உள்ள மேலாத்துக்குறிச்சி உடையார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( 45). கார் டிரைவர்.இவர் காலை மேலாத்துக்குறிச்சியில் இருந்து, தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இவர் கும்பகோணம், காமராஜ் நகர் பகுதியில் உள்ள அரசு கல்லூரி மாணவர் விடுதி சென்றபோது ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இவ்விபத்தில், ராமகிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து கும்பகோணம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் ராமகிருஷ்ணன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story