திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயிலில் தைப்பூச விழா தொடக்கம்

கும்பகோணம் அருகே திருச்சேறை சாரநாத பெருமாள் கோயிலில், தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது, திருச்சேறை சாரநாத பெருமாள் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று, தொடங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கருடாழ்வார் அச்சிட்ட கொடியை மங்கள வாத்தியம் முழங்க பட்டாச்சாரியார்கள் ஏற்றினர்.
அப்போது, கொடிமரம் அருகே சாரநாயகிதாயாருடன், சாரநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து வரும் 26-ம் தேதி வரை நடைபெற உள்ள கோயில் விழாக்களில் பெருமாளும் தாயாரும் படிச்சட்டங்களில் உள்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக 19-ம் தேதி நிலைத் தேரோட்டமும், 26-ம் தேதி இரவு உற்சவப் பெருமாள் பஞ்ச லட்சுமிகளுடன் தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் காணுகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu