சுவாமிமலை பேரூராட்சி மன்றத் தலைவர் பதவி: திமுக வெற்றி

சுவாமிமலை பேரூராட்சி மன்றத் தலைவர் பதவி: திமுக வெற்றி
X
வைஜெயந்தி.
சுவாமிமலை பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் வைஜெயந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சுவாமிமலை பேரூராட்சி மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தலில், திமுக 8 வாக்குகளும், அதிமுக 7 வாக்குகளும் பெற்றனர். இதில் திமுக அதிக வாக்குகள் பெற்றதால், வைஜெயந்தி சிவகுமார் பேரூராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுவாமிமலை பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தலில் திமுக வார்டு உறுப்பினர்கள் ஆறு நபர்களும், அதிமுக வார்டு உறுப்பினர்கள் ஆறு நபர்களும், காங்கிரஸ் உறுப்பினர்கள் இரண்டு நபர்களும், எஸ்டிபிஐ ஒரு உறுப்பினரும் வார்டு உறுப்பினர்கள் என்ற முறையில் தங்களது வாக்கினை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai in future agriculture