/* */

தாராசுரம் காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக குவிந்துள்ள கரும்புகள்

தாராசுரம் காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக ஏராளமான கரும்புகளை வியாபாரிகள் குவித்துள்ளனர்.

HIGHLIGHTS

தாராசுரம் காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக  குவிந்துள்ள கரும்புகள்
X

தாராசுரம் காய்கறி மார்க்கெட் பகுதியில் விற்பனைக்காக குவிந்துள்ள கரும்புகள். 

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் பொங்கலிட்டு, கரும்பு, மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவைகளை வைத்து படையலிட்டு வழிபாடு நடத்துவது வழக்கம்.

இதற்காக ஏராளமான விவசாயிகள் பொங்கல் கரும்புகளை பயிர் செய்து பொங்கலின்போது அறுவடை செய்து விற்பனையில் ஈடுபடுவார்கள். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாராசுரம் மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் விற்பனைக்காக கரும்பை கொண்டு வந்து குவித்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பொங்கல் கரும்பு விற்பனை சரிவடைந்து வந்த நிலையில், இந்த ஆண்டு பொங்கல் கரும்புக்கு நல்ல விலை கிடைக்குமென எதிர்பார்ப்பதாக கரும்பு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தாராசுரம் காய்கறி மார்க்கெட் பகுதியில் கரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பெண் வியாபாரி லட்சுமி கூறுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பொங்கல் கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து வாங்கி வந்து தாராசுரம் மார்க்கெட் பகுதியில் விற்பனை செய்வது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொங்கல் கரும்பு நல்ல விலைக்கு விற்பனை ஆனது. இதனால் கரும்பு விவசாயிகளிடம் நல்ல விலைக்கு கரும்புகளை வாங்கி வந்து நல்ல லாபத்துடன் விற்பனை செய்து வந்தோம்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கரும்பு விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாமல் சரிவடைந்தது. இதனால் எங்களைப் போன்ற கரும்பு வியாபாரிகளுக்கு உரிய லாபம் கிடைக்காமல் போனது. எனவே வியாபாரிகளும் கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலையை கொடுக்க முடியாமல் போனது. இந்த ஆண்டு கரும்பு நல்ல விலைக்கு விற்பனையாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

ஆனால் தற்போது மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்த கரும்பை கிடைத்த விலைக்கு விரைவில் விற்று தீர்த்துவிட வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும் அரசின் கட்டுப்பாடுகளால் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில் பொதுமக்களிடம் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

எனவே நாட்கள் நெருங்க, நெருங்க கரும்பு வியாபாரம் சூடுபிடிக்குமா? அல்லது சரிவடையுமா? என்பது தெரியவில்லை. வியாபாரிகள் கொள்முதல் செய்த விலைக்கு கரும்பு விற்பனை நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கிறோம். விற்பனையில் சரிவு ஏற்பட்டால் அரசு உரிய இழப்பீடு வழங்கி வியாபாரிகளை பெரும் இழப்பில் இருந்து காப்பாற்ற முன்வர வேண்டும் என்று கூறினார்.

Updated On: 7 Jan 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  6. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  7. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  8. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  10. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!