/* */

கும்பகோணம்: பேருந்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவன் பலி

கும்பகோணத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து, கல்லூரி மாணவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

கும்பகோணம்: பேருந்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவன் பலி
X

சதீஷ்குமார்

அரியலூா் மாவட்டம், தேவமங்கலங்கத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் சதீஷ்குமார் (19). கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் பிஎஸ்சி சுற்றுலாத்துறை மூன்றாமாண்டு படித்து வந்தார். கல்லூரி முடிந்து கும்பகோணத்தில் இருந்து தேவமங்கலத்துக்கு செல்வதற்க்காக, ஜெயங்கொண்டம் செல்லும் அரசு பஸ்ஸில் படியில் நின்றபடி பயணம் செய்துள்ளார்.

அப்போது பஸ், கும்பகோணம் 60 அடி சாலை திருப்பதில் சென்ற போது, படியிலிருந்த சதீஷ்குமாரின் புத்தக பை, சாலையின் ஓரத்திலிருந்த கம்பியில் சிக்கியதால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதனையறிந்த கல்லூரி மாணவர்கள், சதீஷ்குமார் உயிரழப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும், டிரைவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு போலீசார், டிஎஸ்பி அசோகன் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில், அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் இருவரையும் கைது செய்தவதாக உறுதியளித்தனர். இதனால், போராட்டம் திரும்ப பெறப்பட்டது. இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 2 May 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  5. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  7. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  9. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  10. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை