/* */

திருச்சியிலிருந்து வாராணசிக்கு விமான போக்குவரத்து வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

திருச்சியிலிருந்து வாராணசிக்கு தில்லி வழியாக விமான போக்குவரத்து செயல்படுத்த எம்பி-க்கள் கோரிக்கை

HIGHLIGHTS

திருச்சியிலிருந்து வாராணசிக்கு  விமான போக்குவரத்து வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
X

சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் மனு அளித்த மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம்  

திருச்சியிலிருந்து இந்தியாவின் தலைநகரமான தில்லிக்கு விமான போக்குவரத்து இல்லாததால் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், யாத்ரிகர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையம் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் தமிழகத்தின் நான்காவது பெரிய நகரமாக சிறந்து விளங்குகிறது.

திருச்சிராப்பள்ளியிலிருந்து வாராணசி மற்றும் தில்லி வழியாக விமான சேவையை இயக்குவதற்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே, திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலிருந்து தில்லி வழியாக வாராணசிக்கு காலை 6-7 மணிக்கு புறப்பட்டு, மாலையில் வாராணசியிலிருந்து திரும்புவதன் மூலம் தினசரி விமானச் சேவையை விரைவாக இயக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் நேரடியாக மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தலைமையில் 13 எம்பி -க்கள் வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

Updated On: 9 Dec 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...