/* */

கும்பகோணம் அருகே அரசு விரைவு பேருந்து மோதியதில் ஒருவர் பலி

கும்பகோணம் அருகே மானம்பாடியில் அரசு விரைவு பேருந்து மோதியதில் ஒருவர் பலி.

HIGHLIGHTS

கும்பகோணம் அருகே அரசு விரைவு பேருந்து மோதியதில் ஒருவர் பலி
X

சென்னையிலிருந்து மன்னார்குடியை நோக்கி அரசு விரைவு பேருந்து வந்து கொண்டிருந்தது. கும்பகோணத்தை அடுத்த மானம்பாடி அருகே வந்து கொண்டிருந்த போது பேருந்துக்கு முன்பு பாலாக்குடியை சேர்ந்த பாலு (60), சைக்கிளில் திடீரென வலது புறமாக திருப்ப முயன்றார். இதனை அறிந்த அரசு விரைவு பேருந்து ஓட்டுநர் விபத்து ஏற்படாமல் இருக்க பேருந்தை திருப்பும் போது, நிலைதடுமாறி எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி, அருகில் உள்ள குளத்தின் கரையில் பேருந்தை நிறுத்தினார். இதில், இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த திருவாய்பாடியை சேர்ந்த நாகராஜன் மகன் சக்திவேல் (30) பலத்த காயமடைந்தார். பின்னால் அமர்ந்து வந்த திருவாய்ப்பாடியை சேர்ந்த செல்வம் (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சக்திவேலை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், பாலுவை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். இதுகுறித்து சோழபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 9 April 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்