/* */

கும்பகோணத்தில் மதுபானக் கூடமான பழைய மீன் மார்க்கெட்: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி..!

கும்பகோணத்தில், மதுபானக் கூடமாக மாறிய பழைய மீன்மார்க்கெட் மாறியதால் பொதுமக்கள் பெரும் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் மதுபானக் கூடமான பழைய மீன் மார்க்கெட்: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி..!
X

கும்பகோணம் அருகே மதுபானக் கூடமாக மாறிய பழைய மீன் மார்க்கெட்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே பிடாரிக்குளம் எதிரே பழைய மீன் மார்க்கெட் உள்ளது. புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை, கும்பகோணம் 60 அடி சாலை, தஞ்சை மெயின் சாலை ஆகிய 3 சாலைகளின் சந்திப்பு பகுதியில் இந்த மீன் மார்க்கெட் அமைந்துள்ளது.

இதனால் இந்த பகுதியில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த பழைய மீன் மார்க்கெட்டில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழைய மீன் மார்க்கெட் உள்ள இடத்தில் வணிக வளாகம் கட்டுவதாக கூறி, மீன் விற்பனை கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் காலி செய்தனர்.

தற்போது கொட்டகையில் தற்காலிக மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஆனால் வணிக வளாகம் கட்டுவதாக கூறி காலி செய்யப்பட்ட பழைய மீன்மார்க்கெட் எந்த பயன்பாடும் இல்லாமல் அப்படியே காலியாக கிடக்கிறது. இதனால் கட்டிடங்கள் மிகவும் சிதிலம் அடைந்து காணப்படுகிறது. மேலும், சமூக விரோதிகள் மற்றும் குடிமகன்களின் புகலிடமாகவும், மதுபானக்கூடமாகவும் மாறி வருகிறது.

இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர், மது பாட்டில்களை வாங்கி வந்து பழைய மீன் மார்க்கெட்டில் அமர்ந்து அருந்துகின்றனர். மேலும் பழைய மீன்மார்க்கெட்டின் இருவாயில்களும் எப்போதும் திறந்து கிடப்பதால் மர்ம நபர்கள் எளிதாக மீன் மார்க்கெட்டிற்குள் செல்ல முடிகிறது. இரவு நேரங்களில் சில சமூக விரோத செயல்களும் நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்த கட்டிடத்தில் உள்ள இரும்பு கம்பிகளையும் மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர்.

கும்பகோணம் மாநகரின் மையப்பகுதியில் தான் பழைய மீன்மார்க்கெட் உள்ளது. இந்த இடத்தில் வணிக வளாகம் ஏதாவது கட்டி வாடகைக்கு விட்டால் மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை ஏதாவது வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது இந்த கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கி விட்டு வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Updated On: 12 Jun 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்