/* */

கும்பகோணம் அருகே வாய்க்கால் தூர்வாரும் பணி - எம்எல்ஏ நேரில் ஆய்வு

கும்பகோணம் அருகே, உள்ளூர் ஊராட்சியில் வாய்க்கால் தூர்வாரும் பணியை எம்எல்ஏ அன்பழகன், நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கும்பகோணம் அருகே வாய்க்கால் தூர்வாரும் பணி - எம்எல்ஏ நேரில் ஆய்வு
X

உள்ளூர் ஊராட்சியில், தூர்வாரும் பணியை எம்.எல்.ஏ. அன்பழகன் பார்வையிட்டார். 

கும்பகோணம் நகராட்சி பகுதியில் இருந்து, உள்ளூர் ஊராட்சி வழியாக தேப்பெருமாநல்லூர் செல்லும் மோரி வாய்க்கால், சுமார் 40 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றும் வகையில், மோரி வாய்க்காலை தூர்வாரிட வேண்டும் என, உள்ளூர் ஊராட்சி பொதுமக்கள், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகனிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, மோரி வாய்க்கால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது இப்பணிகளை, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பார்வையிட்டார் கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் சுதாகர், சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் கரிகாலன், நேரு, ஒன்றிய குழு உறுப்பினர் கோமதி சண்முகம், உள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார், புளியம்பேட்டை ரவி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேந்திரன், இளைஞரணி சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 25 Nov 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்