திருச்சியில் நடந்த மாநில அளவிலான போட்டியில் கும்பகோணம் மாணவர்கள் வெற்றி

திருச்சியில் நடந்த மாநில அளவிலான போட்டியில் கும்பகோணம் மாணவர்கள் வெற்றி
X

தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ள கும்பகோணம் பள்ளி மாணவர்கள்.

திருச்சியில் நடந்த மாநில அளவிலான குடோ போட்டியில் கும்பகோணம் மாணவர்கள் வெற்றி தேசிய போட்டிக்கு தகுதி பெற்று உள்ளனர்.

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான குடோ போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பள்ளி முதல்வர் அம்பிகாபதி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினை தெரிவித்தனர்.

Tags

Next Story