சுவாமிமலை பேரூராட்சியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

X
ஜெயலலிதா நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவினர்.
By - A.Madhankumar, Reporter |6 Dec 2021 5:00 AM IST
கும்பகோணம் அடுத்த சுவாமிமலை பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சுவாமிமலை பேரூராட்சியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு அதிமுக கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் என்.ஆர்.வி.எஸ்.செந்தில் தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினார். மேலும் சுவாமிமலை பேரூர் அதிமுக செயலாளர் ரங்கராஜன் மற்றும் சுவாமிமலை பேரூர் கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு, புகழஞ்சலி செலுத்தினர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu