/* */

இந்து மக்கள் கட்சி -அனுமன்சேனா சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா சார்பில் கொரோனாவை விரட்டும் விநாயகர்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது

HIGHLIGHTS

இந்து மக்கள் கட்சி -அனுமன்சேனா சார்பில்  விநாயகர் சிலை பிரதிஷ்டை
X

கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி -அனுமன்சேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை 

கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் கொரோனாவை விரட்டும்விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கும்பகோணத்தில் கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழக அரசு விநாயகரை பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்யவும், நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதித்துள்ளது. இந்நிலையில், கும்பகோணம் கர்ண கொல்லை வடக்குத்தெருவில், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனாவின் நகர தலைவர் பிரபாகரன் இல்லத்தில், இன்றைய தினம் கொரோனாவை விரட்டும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 11-ஆம் தேதி இந்த விநாயகர் சிலைகள், தமிழக அரசின் உத்தரவுப்படி, நீர்நிலைகளில் கரைக்கப்படும். இதே போன்று நிர்வாகிகளில் இல்லங்களில் 24 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

இது தொடர்பாக, மாநில செயலாளர் பாலா கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ஆம் தேதி கொண்டாடுவதற்கு தயார் நிலையில் இந்து அமைப்புகளும் பொதுமக்களும் காத்திருக்கின்றனர். தமிழக அரசு அவரவர் இல்லங்களில் வைத்து வழிபடலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. எங்களுடைய இல்லங்களில் வைத்து வழிபடுவதற்கு, தமிழக அரசு ஏன் அனுமதி அளிக்க வேண்டும் என்ற கேள்வியை நாங்கள் தொடர்ந்து முன்னெழுப்புகிறோம். அதன் தொடர்ச்சியாக, பொது இடங்களில் வைக்க அண்டை மாநிலங்களான, கர்நாடகாவில் புதுச்சேரி, தெலங்கானாவில் உள்ளிட்ட பகுதிகளில் பொது இடத்தில் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழக அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. நீதிமன்றம் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்துவதற்கு விரைவில் நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற அன்பர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் என்றார்.

இந்நிகழ்ச்சியில், நகர தலைவர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் ஆகியோர் கொரோனா வைரஸை விரட்டும் வகையில், சங்கல்பம் பிரார்த்தனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Updated On: 6 Sep 2021 2:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  3. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  4. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  5. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  6. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  7. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  8. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  9. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  10. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...