/* */

சுவாமி மலை அருகே நடந்த சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமி மலை அருகே நடந்த சாலை விபத்தில் விவசாயி தலைநசுங்கி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சுவாமி மலை அருகே நடந்த சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
X

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே இன்னம்பூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் விவசாயி தங்கையன் (70). இவருடைய நண்பர் சுவாமிநாதன் என்பவர் டூவீலரில் இன்னம்பூர் கடைவீதியில் வீட்டிற்கு வேண்டிய சாமான்களை வாங்கிக்கொண்டு டூவீலரில் வந்தார்.

இந்த சமயத்தில் திருப்புறம்பியத்தில் இருந்து கும்பகோணத்தை நோக்கி அரசு நகரப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையில் சறுக்கி விழுந்த சுவாமிநாதன் இடது புறமாகவும், தங்கையன் வலது புறமாகவும் விழுந்தனர். இதில் பஸ்சின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே விவசாயி தங்கையன் இறந்தார். சுவாமிமலை காவல் துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அவர்கள் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் காந்திநகர் பகுதி சோகத்தில் மூழ்கியது.

Updated On: 14 Feb 2022 4:31 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...