/* */

முறைகேடுகள் குறித்து விவாதிக்க ஊராட்சி மன்ற கூட்டத்தில் அனுமதி மறுப்பு

பட்டீஸ்வரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் முறைகேடுகள் குறித்து விசாரணை குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் திமுகவினர் வெளிநடப்பு.

HIGHLIGHTS

முறைகேடுகள் குறித்து விவாதிக்க ஊராட்சி மன்ற கூட்டத்தில் அனுமதி மறுப்பு
X

பட்டீஸ்வரம் ஊராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுகவினர்.  

கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரத்தில் ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் வெற்றிச்செல்வி ரகு தலைமை தாங்கினார். துணை தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பட்டீஸ்வரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குளங்கள், மகசூல் உள்ளிட்டவற்றை ஏலம் விடுவதற்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து பட்டீஸ்வரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தரைகடை, குளங்கள் உள்ளிட்டவை ஏலம் விடுவது தொடர்பாக நடைபெறும் முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு குறித்து கூட்டத்தில் விவாதிக்க திமுகவினர் வலியுறுத்தினார். இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் அனுமதி மறுத்ததால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Updated On: 2 Aug 2021 10:44 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்